search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திரிணாமுல் காங்கிரஸ் குழுவினர் தடுத்து நிறுத்தம்"

    அசாம் மாநிலத்தில் நுழைய முயன்ற திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் அடங்கிய குழுவினர் சில்சார் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. #NRCIssue #SilcharAirport #TMCDelegation
    கவுகாத்தி:

    வங்காளதேசத்தில் இருந்து வந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காணும் வகையில் அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் தயாரிக்கப்பட்டது. 

    அதன் இறுதி வரைவு அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. மொத்தம் உள்ள 3,29,91,384 விண்ணப்பதாரர்களில் 2,89,83,677 பேர் குடிமக்களின் தேசிய பதிவேட்டில் சேர்க்கப்பட்டனர்.  சுமார் 40 லட்சம் பேர் இந்த பதிவேட்டில் விடுபட்டது தொடர்பாக கடும் சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரம் பாராளுமன்ற இரு அவைகளிலும் எதிரொலித்தது.

    அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு, உள்நாட்டு போரை விளைவிக்கும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி கடுமையாக ஆட்சேபம் தெரிவித்திருந்தார்.



    இந்நிலையில், அசாம் மாநிலத்தில் நுழைய முயன்ற திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் அடங்கிய குழுவினர் சில்சார் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சுகேந்து ராய் உள்பட 8 பேர் கச்சார் மாவட்டத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றனர்.

    ஆனால், அங்கு தற்போது 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் குழுவினரை தடுத்து நிறுத்தியுள்ளோம் என போலீசார் தெரிவித்தனர். 

    இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான டெரிக் ஓ பிரையன் கூறுகையில்,  மக்களை சந்திக்க செல்வது எங்களின் ஜனநாயக கடமை. விமான நிலையத்தில் எங்கள் குழுவினர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதை பார்த்தால் இங்கு சூப்பர் எமர்ஜென்சி நிலை நிலவுகிறது போல் தெரிகிறது என ஆவேசமாக பேசினார். #NRCIssue #SilcharAirport #TMCDelegation
    ×